தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறையில் ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு வேறு, வேறு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய ஊதிய முரண்பாடு மாத சம்பளத்தில் ரூ.2 ஆயிரம் அளவுக்கு உள்ளது. சமவேலைக்கு, சம ஊதியம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரே கல்வித்தகுதி, ஒரே பதவிக்கு இரு வேறு ஊதியங்கள் வழங்கப்பட்டு வரும் முரண்பாட்டை சரிசெய்யக்கோரி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் கடந்த 2 நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் அனோன்சியா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ரூபி, கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேசினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.