15 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது: பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்




ஆலங்குடி தாலுகா பாச்சிக்கோட்டை ஊராட்சியில் எம்.ராசியமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சர்வோதயா விவசாய பண்ணைக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து 15 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு இச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கேக்வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் பொதுமக்கள் பிரியாணி சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments