பழந்தாமரை கிராமத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடிசை அகற்றம்




ஆவுடையார்கோவில் தாலுகா பழந்தாமரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை அமைத்திருந்தார். இதையடுத்து ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் உத்தரவின் பேரில், பொன்பேத்தி மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர், ஆவுடையார்கோவில் சரக கிராம உதவியாளர்கள் ஆகியோர் போலீசார் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடிசையை அகற்றினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments