மக்கள் நீதிமன்றம்
புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் குடும்ப நல மாவட்ட நீதிபதி ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தி, அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைபொருள் தடுப்பு நீதிமன்ற சிறப்பு மாவட்ட அமர்வு நீதிபதி பாபுலால், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பிச்சை, முதன்மை சார்பு நீதிபதி சசிகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி பூர்ணிமா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்- 1 ஜெயந்தி, வக்கீல் சங்க தலைவர் சின்னராசு, புதுக்கோட்டை மாவட்ட குற்ற வழக்கு எதிர்வாத சட்ட உதவி அமைப்பின் தலைமை வக்கீல் ஷேக்திவான், துணை தலைமை வக்கீல்கள் மதியழகன், அங்கவி மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
1,172 வழக்குகள் சமரச தீர்வு
புதுக்கோட்டை நகரத்தில் மொத்தம் 7 அமர்வுகளும், மாவட்டம் முழுவதும் 12 அமர்வுகளும் விசாரணைக்காக அமைக்கப்பட்டு 3,090 வழக்குகள் பட்டியலிடப்பட்டது. இதில் 1,172 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது. உரியவர்களுக்கு ரூ.9 கோடியே 65 லட்சத்து 88 ஆயிரத்து 195 வரையிலான தொகைக்கு தீர்வு காணப்பட்டது. இந்தநிகழ்வினை, புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திரகண்ணன் ஒருங்கிணைத்தார்.
ஆலங்குடி
ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி தலைமை தாங்கினார். இதில் வக்கீல் சங்க தலைவர் எஸ்.பி.ராஜா, பட்டியல் வக்கீல் ரெங்கராஜ், அரசு வக்கீல் கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதிமன்றத்தில் 450 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 415 வழக்குகள் பேசி முடிக்கப்பட்டது. மேலும், கல்விக்கடன், விவசாய கடன், குழுக்கடன் உள்ளிட்ட வழக்குகள் சமரச தீர்வு மூலம் ரூ.21½ லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.