அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் தேங்காய் விற்பனை மையம் திறப்பு




ரெயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கீழ் தேங்காய் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கியில் ரெயில் நிலையத்தில் தேங்காய் விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெயில்வே கோட்ட இயக்க மேலாளர் மதன் சோமராஜ் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், கவுன்சிலர் விஸ்வமூர்த்தி, ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வணிக மேலாளர் மஞ்சு கல்வெட்டை திறந்து வைத்தார். விழாவில் வர்த்தக சங்க செயலாளர் தவசிமணி, பொருளாளர் சேக் அப்துல்லா, ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments