அம்மாபட்டினம் ஊராட்சி துணை தலைவர் நூர் முகமது பதவி விலகல்




அம்மாபட்டினம் ஊராட்சியில் துணை தலைவராக நூர் முகமது என்பவர் இருந்து வந்தார். இவர், அம்மாபட்டினம் ஊராட்சி வடக்கு தெரு, சுனாமி குடியிருப்பு, வண்ணான் குளம் ஆகிய பகுதிகளில் குடிநீர் வசதி சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என்று அதிகாரிகளிடம் கூறியிருந்தார். இதுகுறித்து அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம், நூர் முகமது தனது துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஊராட்சி துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்த விவகாரம் அம்மாபட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments