மாவட்டத்தில் மறுசீரமைப்பில் கூடுதலாக சேர்ப்பு: 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,560 வாக்குச்சாவடிகள் கலெக்டர் தகவல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் மறுசீரமைப்பில் கூடுதலாக சேர்க்கப்பட்டதில் 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,560 வாக்குச்சாவடி உள்ளதாக கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி சீரமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு, கிராமபுறம் மற்றும் நகர்புறம் 1,500 வாக்காளர்களுக்கு அதிகம் உள்ள வாக்குச்சாவடி மையங்களை துணை வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்துதல், பழுதான வாக்குச்சாவடி மையங்களை இடமாற்றம் செய்யவும், குடியிருப்பு பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டருக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களை அருகில் இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

வாக்குச்சாவடி மையங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு, கிராமப்புறம் மற்றும் நகர்புறம் 1,500 வாக்காளர்களுக்கு அதிகம் உள்ள வாக்குச்சாவடி மையங்களை துணை வாக்குச்சாவடி மையங்கள் 1, பழுதடைந்த கட்டிடங்கள் மாற்றுதல் 29, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாக்குச்சாவடி மையம் மாற்றுதல் 6 மற்றும் வாக்குச்சாவடி மையத்தின் பெயர் மாற்றுதல் 6 ஆக மொத்தம் 41 வாக்குச்சாவடி மையங்களுக்கான முன்மொழிவுகளை சென்னை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்புவதற்கு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி

மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,559 வாக்குச்சாவடிகளில் உள்ளதில் தற்போது புதிதாக தோற்றுவிக்கப்படும் 1 வாக்குச்சாவடியினை சேர்த்து 1,560 வாக்குச்சாவடி மையங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது என கலெக்டர் மெர்சிரம்யா தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், நகராட்சி ஆணையர் ஷியாமளா, வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), சிவக்குமார் (அறந்தாங்கி), தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா, அனைத்து வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments