தொண்டி கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையம் சார்பில் கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணி (சஜாக் ஆப்ரேஷன்) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா, மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹீர், மீன்வள அமலாக்கத்துறை சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், ஆகியோர் கடலில் 12 டன் படகில் கூட்டுரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதன் அடிப்படையில் கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேற்று தொண்டி கடற்கரை போலீஸ் நிலையத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது கடலில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசாரின் ரோந்து பணியையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் தொண்டி அருகே உள்ள சோளியக்குடி கடற்கரை கிராமத்திற்கு சென்று அங்குள்ள ஜெட்டி பாலத்தில் படகுகளை ஆய்வு செய்தார்.
அப்போது கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா உள்பட பலரும் உடன் சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.