செகந்திராபாத் -ராமநாதபுரம் செகந்திராபாத் (07695/07696) வாராந்திர சிறப்பு ரயில்கள் சிதம்பரம், சீர்காழி, திருவாரூர் வழியாக இயக்கப்பட்டன. இதில், செகந்திராபாத் ரயில் (07695) செகந்திராபாத்தில் இருந்து, இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். மறுவழித்தடத்தில், ராம நாதபுரம்- செகந்திராபாத் ரயில் (07696) ராமநாதபுரத்தில் இருந்து, காலை 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திரா பாத் சென்றடையும்.
இந்தரயில்கள் நிர்வாக காரணங்களுக்காக பிப்ரவரி 2-வது வாரத் தில் நிறுத்தப்பட்டுவிட்டன.
இதற்கு வியாபாரிகள், வர்த்தக அமைப் பினர், பொதுமக்கள் கடும் கண் டனம் தெரிவித்ததுடன் இந்த ரயில் களை இயக்க கோரிக்கை
விடுத்து வந்தனர்.
இந்நிலையில், செகந்திராபாத்
ராமநாதபுரம் ரயிலை மீண்டும் இயக்குவதற்கு பரிசீலனை செய் யப்பட்டு வருகிறது.
இதற்காக ரயில்வே வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி யுள்ளனர்.
விரைவில், நடைமுறைக்கு வரவுள்ள கோடைகால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பின் போது, செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர ரயில் இயக்கம் குறித்தும் அறிவிக்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.