புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி சந்தைப்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் மருந்து கடை வைத்துள்ளார். அவர் அங்குள்ள ஒரு அறையில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர், மருத்துவம் படிக்காமல் மருந்து கடையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்படி மணமேல்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சரண்யா தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சரவணன் அரசின் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாபிக் இப்ராகிம் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனர். மேலும் அவரை மணமேல்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.