பாம்பன் தூக்குப்பாலத்தை இழுவை கப்பல், மீன்பிடி படகுகள் கடந்து சென்றன. அதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
பாம்பன் தூக்குப்பாலம்
பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த 5 நாட்களுக்கு மேலாக இழுவை கப்பல் மற்றும் மிதவை கப்பலும் மீன்பிடி படகுகளும் காத்திருந்தன. இந்த நிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப் பாலம் நேற்று திறக்கப்பட்ட நிலையில் உடன்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் ராம்பிலி துறைமுகம் செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்று மிதவை ஒன்றை இழுத்தபடி தூக்குப்பாலத்தை கடந்து சென்றது.
இதே போல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து உடன்குடி செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்றும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது.
மீன்பிடி படகுகள் கடந்தன
இதே நேரத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகளும், தூத்துக்குடியில் இருந்து நாகப்பட்டினம் செல்வதற்காக 10-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன. இழுவை கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் தூக்குப்பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.