பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த இழுவை கப்பல், மீன்பிடி படகுகள் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்




பாம்பன் தூக்குப்பாலத்தை இழுவை கப்பல், மீன்பிடி படகுகள் கடந்து சென்றன. அதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

பாம்பன் தூக்குப்பாலம்

பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த 5 நாட்களுக்கு மேலாக இழுவை கப்பல் மற்றும் மிதவை கப்பலும் மீன்பிடி படகுகளும் காத்திருந்தன. இந்த நிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப் பாலம் நேற்று திறக்கப்பட்ட நிலையில் உடன்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் ராம்பிலி துறைமுகம் செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்று மிதவை ஒன்றை இழுத்தபடி தூக்குப்பாலத்தை கடந்து சென்றது.

இதே போல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து உடன்குடி செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்றும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது.

மீன்பிடி படகுகள் கடந்தன

இதே நேரத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகளும், தூத்துக்குடியில் இருந்து நாகப்பட்டினம் செல்வதற்காக 10-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன. இழுவை கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் தூக்குப்பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments