அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தனியார் நிறுவன ஊழியர்கள்
இதுகுறித்து தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனருக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 135-பி பிரிவில், வாக்குப்பதிவு தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள், அதாவது கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்குமே வாக்களிக்க வழிவகை செய்வதற்காக, அன்று ஒருநாள் சம்பளத்துடன் விடுமுறை அளிப்பது அந்த சட்டப்படி அவசியமாகும்.
கட்டுப்பாட்டு அறைகள்
மேலும், இதன் மூலம் தொகுதிக்கு வெளியே பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் சொந்த தொகுதிக்குச் சென்று வாக்களிக்க முடியும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, நிறுவனங்கள், கடைகளில் தினக் கூலியாகவோ, தற்காலிக பணியாளர்களாகவோ பணியாற்றுவோரும், வாக்குப்பதிவு தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை பெறும் தகுதியைப் பெற்றுள்ளனர். எனவே தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், பொது மற்றும் தனியார் துறைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ. நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவன அதிபர்களும், ஏப்ரல் 19-ந் தேதியன்று அனைத்துத் தொழிலாளிகளுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளிக்கும்படி அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த உத்தரவை அனைத்து நிறுவனங்களும் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறையை தொடங்க வேண்டும். இதுகுறித்த விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.