பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை




ஆலங்குடி அருகே உள்ள மணவிடுதி ஊராட்சிக்குட்பட்ட பெருங்கொண்டான்விடுதி மேலத்தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் குணா (வயது 18). இவர் திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். இவர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த குணா வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குணா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments