வங்க கடலில் தற்போது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் ஆகும். மேலும், மீனவர்கள் இந்த காலகட்டங்களில் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால், மீன் வளங்கள் குறைந்துவிடும். இதனால், மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரையிலான 61 நாட்கள், கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் விசைப்படகுகள் (Powerboats) மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுதுபார்த்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர்.
மீன்பிடி தடைக்காலம் இருந்தபோதிலும், வள்ளம், பைபர் படகுகள், கட்டுமரம் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் கரையோர பகுதிகளில் மட்டும் மீன்பிடிக்க செல்லலாம். மேலும். இந்த காலகட்டத்தில் உயர் ரக மீன்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும். இதனால் மீன்களின் விலை உயரும் சூழல் ஏற்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.