பாஸ்டேக்
சுங்கச்சாவடிகளில் வாகனங்களிடம் ரொக்கமாகவோ, டிஜிட்டல் பணபரிமாற்றம் மூலமாகவோ கட்டணம் வசூலித்தால், வாகனங்கள் தேங்கி போக்குவரத்து நெரிசல் உண்டாகும்.
அதை தவிர்ப்பதற்காக, ‘பாஸ்டேக்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ‘பாஸ்டேக்’ வில்லைகளை வாகனங்களில் ஒட்டிக்கொண்டால், சுங்கச்சாவடியை கடக்கும்போது பிரீபெய்டு கட்டணத்தில் இருந்தோ அல்லது அதனுடன் இணைந்த வங்கி சேமிப்பு கணக்கில் இருந்தோ சுங்க கட்டணம் தானாக கழிக்கப்பட்டு விடும்.
நாடு முழுவதும் 98 சதவீத வாகனங்கள் ‘பாஸ்டேக்’ முறைக்கு மாறிவிட்டன.
நெடுஞ்சாலை ஆணையம்
அதே சமயத்தில், சிலர் ஒரே வாகனத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ‘பாஸ்டேக்’ வில்லைகளையும், ஒரே வில்லையை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கும் பயன்படுத்தி வருவது தெரிய வந்தது.
இதை தடுக்க ‘ஒரே வாகனம், ஒரே பாஸ்டேக்’ திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வகுத்தது. இதன்படி, ஒரு வாகனத்துக்கு ஒரு ‘பாஸ்டேக்’ வில்லைதான் பயன்படுத்த முடியும்.
அனைத்து வாகனங்களும் இந்த திட்டத்துக்கு மாறிக்கொள்ள மார்ச் 31-ந் தேதிவரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கால அவகாசம் வழங்கியது. ‘பேடிஎம் பாஸ்டேக்’ புகாரில் சிக்கியதால், அதன் பயனாளர்கள் வேறு வங்கிக்கு மாறும்படி ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது.
இனிமேல் செயல்படாது
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய கால அவகாசம் முடிந்தநிலையில், நேற்று ‘ஒரே வாகனம், ஒரே பாஸ்டேக்’ திட்டம் அமலுக்கு வந்தது.
இதுபற்றி ஒரு அதிகாரி கூறியதாவது:-
இனிமேல் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டேக் வில்லைகள் வேலை செய்யாது. ஒரே வாகனத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டேக் வைத்திருந்தால், அனைத்து பாஸ்டேக் வில்லைகளையும் பயன்படுத்த முடியாதநிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.