கோபாலப்பட்டிணத்தில் GPM உரிமைக் குழு சார்பாக மின் விளக்குகள் சரி செய்யப்பட்டது



கோபாலப்பட்டிணத்தில் GPM உரிமைக் குழு சார்பாக  மின் விளக்குகள் சரி செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசகுடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பல மாதங்களாக மீமிசல் காவல் நிலையம் எதிரே கோபாலப்பட்டிணம் செல்லும் பாதையில் எந்த மின் விளக்குகளும் எரியாமல் இருள் சூழ்ந்து இருந்தது. இந்த மின் விளக்குகள் எரியாததால் அந்த சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் சிரமமாக இருந்து வந்தது. 
 
இந்நிலையில் கோபாலப்பட்டிணம் உரிமைக் குழு சார்பாக காட்டுகுளம் சாலை, எஸ்பிஐ வங்கியில் இருந்து கோபாலப்பட்டிணம் ஊருக்குள்ளே வரும் முக்கியமான இரண்டு பிரதான சாலைகளில் உள்ள அனைத்து மின் கம்பங்களில் எரியாத மின்விளக்குகளை மாற்றியும் மற்றும் பிரேக்கர் மாற்றியும் மின் விளக்குகள்  05-04-2024 சரி செய்யப்பட்டது.

மின் விளக்குகள் சரி செய்வதற்காக முயற்சி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களையும் & பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்...

GPM மீடியா சார்பாக இருள் சூழ்ந்த காணப்பட்ட சாலையின் வெளியிட்ட செய்திகள்









-----------------------------------------














எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments