ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளானூர் கிராமத்தில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை அதிகாரியிடம் புகார் மனு கொடுத்தனர். ஆனால் இதுநாள் வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரியும், குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 1 மணி நேரம் மட்டுமே வருகிறது. தற்போது வெயில் காலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறையாலும் அவதிப்படுகின்றனர். அதேபோல் குறைந்த அளவு மின்சாரம் மட்டும் வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் விளானூர் அண்ணா நகர் பகுதியில் சுமார் 4 தலைமுறைகளாக 35 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எனவே எங்களுக்கு பட்டா வழங்க கோரி பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் எந்த கட்சிக்கும் வாக்களிப்பது இல்லை என்று தேர்தலை புறக்கணித்து பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.