திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு




காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே தீபாவளி பண்டிகை முன்னிட்டு இயக்கப்பட்ட 
சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண் 06069/06070 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு கட்டண விரைவு ரயில்  செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைப்பூண்டி காரைக்குடி மானாமதுரை விருதுநகர் வழியாக இயக்கப்பட உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 11-04-2024 முதல் 30-05-2024 வரை (வாரந்தொறும் வியாழக்கிழமை) யிலும் மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து 12-04-2024 முதல் 31-05-2024 வரை(வெள்ளிக்கிழமை)  இயக்கிட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்ட செய்தி:

வண்டி எண் : 06070  திருநெல்வேலி  -  சென்னை எழும்பூர் 

வண்டி எண் : 06070  திருநெல்வேலியில்  ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் மாலை 6-45 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் சென்னை எழும்பூர் சென்றடையும் 

வண்டி எண் : 06069
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ‌-

மறுமாா்கத்தில் வண்டி எண் : 06068
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி -  இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில்  வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3-00 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் 

சிறப்பு விரைவு ரயில் எங்கே எங்கே நின்று செல்லும் ??

திருநெல்வேலி சந்திப்பு,
கோவில்பட்டி,
சாத்தூர்,
விருதுநகர் சந்திப்பு ,
அருப்புக்கோட்டை ,
மானாமதுரை சந்திப்பு,
சிவகங்கை,
கல்லல்
காரைக்குடி சந்திப்பு,
அறந்தாங்கி,
பேராவூரணி,
பட்டுக்கோட்டை,
அதிராம்பட்டினம்,
முத்துப்பேட்டை,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
மயிலாடுதுறை சந்திப்பு,
சீர்காழி,
சிதம்பரம்,
கடலூர் துறைமுகம் சந்திப்பு,
விழுப்புரம் சந்திப்பு,
செங்கல்பட்டு சந்திப்பு,
தாம்பரம்,
சென்னை எழும்பூர் 

ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த சிறப்பு விரைவு ரயிலில்

AC Two Tier - 1
AC Three Tier - 6
SL Class - 9
GS (UR) - 4
சரக்கு பெட்டி - 1
மாற்றுத்திறனாளிகள் பெட்டி - 1 என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

இதன் மூலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து திருவாரூர்- காரைக்குடி வழித்தடத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஊர்களுக்கு வர நேரடி இரயில் நமக்கு கிடைக்கிறது..

இந்த இரயில் வியாழன் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் க்கும்

வெள்ளி. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி க்கும் வாராந்திர இரயிலாக இயங்கும்..




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments