மணமேல்குடி அருகே போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது




மணமேல்குடி அருகே போதை மாத்திரைகள் விற்ற வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போதை மாத்திரை விற்பனை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ஆதிபட்டினம் கடற்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலமாக உடலில் செலுத்தி கொள்வதாகவும், மேலும் அதனை விற்பனை செய்வதாகவும் மணமேல்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மணமேல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் 2 பேர் அங்கிருந்து தப்பியோடினர்.

2 வாலிபர்கள் கைது

இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஆதிபட்டினம் பகுதியை சேர்ந்த லியாஸ்மீரான் (வயது 22), ராஜா முகமது (21) என்பதும், அவர்கள் போதை மாத்திரைகளை பயன்படுத்தியதும், போதை மாத்திரைகளை விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, அவர்கள் 2 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments