புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த பல மாதங்களாக மழை இல்லாமல் நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. ஒவ்வொரு நீர்நிலைக்கும் தண்ணீர் செல்லும் வரத்து வாரிகள் மராமத்து இல்லாமலும் ஆக்கிரமிப்புகளாலும் காணாமல் போய்விட்டது. கிராமங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு மழைத் தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் காணாமல் போனதால் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் கீழே போய்விட்டதால் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு தூர்வாரும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் கடந்த பல மாதங்களுக்கு பிறகு கீரமங்கலம் பகுதியில் மழை பெய்தது. இந்த மிதமான மழைத் தண்ணீரையும் வீணாக்காமல் கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள வீரமணி என்ற இளைஞர், தன் வீட்டு கூரையில் விழும் மழை தண்ணீரை தூசிகள் வராமல் பல இடங்களில் சல்லடை வைத்து வடிகட்டி பிளாஸ்டிக் குழாய் மூலம் பழைய கிணற்றை தண்ணீர் சேமிப்பு தொட்டியாக மாற்றி சேமித்து குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வருகிறார். இதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் புதிய வீடுகள் கட்டும் போது செப்டிக் டேங்க் கட்டுவது போல மழைநீர் சேமிப்பு தொட்டிகளும் கட்டிக் கொண்டால் நம் வீட்டிற்குத் தேவையான தண்ணீரை நாமே சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
மேலும் எஞ்சிய தண்ணீரை அருகில் உள்ள பழைய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் சேமித்து மழைத் தண்ணீர் வீணாகாமலும் நிலத்தடி நீரை உயர்த்தலாம் என்றும் இளைஞர்கள் கூறுகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.