அறந்தாங்கியில் வெறிநாய் கடித்து 2 பேர் படுகாயம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. இந்நிலையில் நகராட்சி பகுதியில் நாய் தொல்லை அதிக அளவில் இருந்து வருகிறது. இரவு நேரங்களில் சாலையில் படுத்து கொண்டு நடந்து செல்பவர்களை குறைப்பதும், வாகனங்களை துரத்துவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆவுடையார்கோவில் சாலையில் உள்ள மண்டிகுளம் பகுதியில் நாய் கடித்ததில் ஆடுகள் பலியானது.

இந்நிலையில் நேற்று பொற்குடையார் கோவில் செல்லும் சாலையில் நின்று கொண்டு இருந்த 2 பேரை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. இதேபோல் சாலையில் சுற்றி திரிந்த 2 மாடுகளை வெறி நாய் கடித்து உள்ளது. வெறிநாய் கடியால் காயமடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். உடனே வெறிநாயை பிடிக்க வேண்டும். அறந்தாங்கி நகராட்சி பகுதியில் நாய் தொல்லையை கட்டுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments