முதுகுளத்தூர் அருகே ஊருக்குள் போதை பொருட்களை பயன்படுத்த தடை விதித்து கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மது உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் பயன்படுத்தி வந்ததாகவும், இதனால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.
இதையடுத்து அந்த கிராம மக்கள் ஒன்றுகூடி கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில், மது உள்ளிட்ட போதைப்பொருட்களை கிராமத்தில் யாரும் பயன்படுத்தக்கூடாது. மீசல் கிராமத்தில் மது அருந்துபவர்கள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் வெளியூர் சென்று பயன்படுத்த வேண்டும்.
இந்த கிராமத்திற்குள் கட்டுப்பாடுகளை மீறி போதை பொருட்களை பயன்படுத்தினால் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக கிராம எல்லையில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அந்த பலகையில், ``மீசல் கிராமத்தில் பொது இடங்களில் மது மற்றும் போதை பொருட்களை உபயோகப்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எழுதப்பட்டு உள்ளது. இந்த தகவல் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பரவியுள்ளது. அங்கு இதுகுறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.