10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2024: கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 85.45% பேர் தேர்ச்சி! முதல் மூன்று இடங்கள்?



கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் தேர்வில் 85.45% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் தேர்வு முடிவை வெளியிட்டனர். மொத்தம் 91.55 சதவீதம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்தாண்டு 91.35% பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், இந்தாண்டு தேர்ச்சி அடைந்தோர் விகிதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை போலவே, மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,47,061 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 4,22,591 (94.53%), 4,47,203 தேர்வு எழுதிய நிலையில் 3,96,152 (88.58%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு தேர்வினை 55 பேர் எழுதினர். இதில் 30 பேர் மாணவி, 25 பேர் மாணவர் அடங்குவர். இதில் 85.45% (47/55) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர், அதேசமயம் 14.55% மாணவர்களின் வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. இதில் மாணவர்கள் 84% பேர் (21/25) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 86.66% பேர் (26/30) தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் விரைவில் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விபரம்:

1.K.ராஜலெட்சுமி- 454/500
2.A.ஹரிஹரன் பிரபு- 441/500
3.H.அஸிரா- 429/500

மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி அதில் 85.45% சதவீதம் மாணவர்களை தேர்ச்சி பெற செய்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் GPM மீடியா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வரக்கூடிய கல்வியாண்டில் இப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு GPM மீடியா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியான நிலையில், வரும் 13ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்று பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவு என கருதும் மாணவர்கள் வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

K.ராஜலெட்சுமி- 454/500

A.ஹரிஹரன் பிரபு- 441/500

H.அஸிரா- 429/500

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...




Post a Comment

0 Comments