புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் 04.05.24 சனிக்கிழமை மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில் “மழை வேண்டி சிறப்பு தொழுகை” நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றி, வறண்டு காணப்படுகிறது. கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி பசுமையான சூழ்நிலை உருவாக வேண்டியும் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார ஜமாத் உலமா சபை சார்பாக இஸ்லாமியர்கள் மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார உலமா சபை சார்பில் சார்பில், 04-05-2024 சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இமாம் அப்துல்லாஹ் தலைமையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது . மௌலவி முஜிபுர் ரஹ்மான் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
சுற்று வட்டார அனைத்து ஜமாத்துகளை சேர்ந்த பிரமுகர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார உலமா சபை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் வருகை தந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.