மீமிசலில் கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் “மழை வேண்டி தொழுகை"



புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் 04.05.24 சனிக்கிழமை மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில் “மழை வேண்டி சிறப்பு தொழுகை” நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றி, வறண்டு காணப்படுகிறது. கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி பசுமையான சூழ்நிலை உருவாக வேண்டியும் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார ஜமாத் உலமா சபை சார்பாக இஸ்லாமியர்கள் மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில்  மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார உலமா சபை சார்பில்  சார்பில், 04-05-2024 சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது.   இமாம் அப்துல்லாஹ் தலைமையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது . மௌலவி முஜிபுர் ரஹ்மான்  சிறப்பு பிரார்த்தனை செய்தார். 

சுற்று வட்டார அனைத்து ஜமாத்துகளை சேர்ந்த பிரமுகர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். 

ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார உலமா சபை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் வருகை தந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments