கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாருக்கு அதிகபட்ச அரசு இழப்பீடு பெற்று தருவேன் என அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமசந்திரன் உறுதி




கோபாலப்பட்டிணத்தில் படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகம்மது குடும்பத்தினருக்கு  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் M.L.A ஆறுதல் கூறினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமசந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அப்போது அவர் நைனா முகமது படுகொலை செய்தி கேட்டு மீளா துயரம் கொண்டேன். இரண்டு பிள்ளைகளுடன் கணவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அதிகபட்ச அரசு இழப்பீடு பெற்று தருவேன் என்று கூறினார்.

இச்சந்திப்பின் போது ஒன்றிய தலைவர்கள் சரவணன். கூடலூர் முத்து. நகர தலைவர் வீராச்சாமி. மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் அசாரூதீன் முரளி உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்..








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments