சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில் கோட்டை பட்டினத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு




சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைபட்டினம் நகரம் சார்பாக, தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் U.செய்யது அகமது  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டசெயலாளர் F.முகம்மது சாலிகு,தொகுதி தலைவர் செல்லத்தா முகம்மது மைதீன் துணை தலைவர் பசீர் அகமது  நகர நிர்வாகிகள் அரபாத் கான் முகபத் கான் முகம்மது காசிம் ஆகியோர் கலந்துகொண்டு குடிநீர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் ஜமாத் தலைவர் சரீப் அப்துல்லா வர்த்தக சங்க நிர்வாகி ரகுமான் கான்,கான் மாமா ,பாவா பக்ருதீன், ஆட்டோ சங்க செயலாளர் ஜமால் உள்ளிட்டமுக்கிய பிரமுகர்கள் மற்றும்  ஆயிரத்து மேற்பட்ட பொதுமக்கள் திரளாககலந்து கொண்டனர்.


என்றும் மக்கள் பணி யில் 
SDPI கட்சி
கோட்டை பட்டினம் நகரம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments