கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி!!




கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் வியாழக்கிழமை காலை இடி மின்னலுடன் கோடை மிதமான மழை பெய்தது. வெப்பத்தை தணிக்க பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாகக் காணப்பட்டது. பொதுமக்கள் வெளியே செல்லாது வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டங்களுடன் காணப்பட்ட நிலையில், காலை 7.15 மணிக்கு மேல் இடி,மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வெயில் தாக்கம் காரணமாக தொடர்ந்து அவதியுற்று வந்த மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியைத் தந்துள்ளது.

மழையால் ஒரு சில தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

தற்போது பெய்த  மழையினால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம், நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள். நெடுங்குளத்தில்  குறைவான அளவில் தண்ணீர் உள்ளது. காட்டுக்குளத்லில் குளிப்பதற்கு ஓரளவு தண்ணீர் உள்ளது, ஆகையால் நெடுங்குளம்  எப்போது நிரம்பும் என மக்கள் காத்து கொண்டு உள்ளனர்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments