புதுக்கோட்டை மாநகராட்சியை தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து 2 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கடையடைப்பு போராட்டம்
புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதில் நகராட்சியையொட்டியுள்ள திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், முள்ளூர் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைத்து அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புக்கு ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி அறிவிப்பை திரும்ப பெற கோரியும் திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 2 கிராமங்களில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சுவரொட்டி
இந்த பகுதிகளில் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டம் தொடர்பாக ஆங்காங்கே சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் மாநகராட்சி அறிவிப்பை திரும்ப பெற கோரியும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் போது தங்களது கிராமத்தில் வரியினங்கள் அதிகரிக்கும் எனவும், 100 நாள் வேலை திட்டம் பாதிக்கும் எனவும், அரசின் சலுகைகள் பாதிக்கப்படும் எனவும், அதனால் மாநகராட்சியாக தரம் உயர்த்த தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.