அரசு ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்




புதுக்கோட்டை மற்றும் விராலிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர்ந்திட www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் மேற்காணும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்டு 2024 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையவழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.50-ஐ கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க், ஜி-பே வாயிலாக செலுத்தலாம். மேலும் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750-ம் வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் இலவச விடுதி வசதி உண்டு. இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி கடைசி நாளாகும் என கலெக்டர் மெர்சிரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments