ஆவுடையார் கோவில் அருகே சிறுகாசாவயல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ளாற்றில் குழித்தோண்டி தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே சிறுகாசாவயல் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாதத்தில் ஒரு நாள் மட்டுமே 2 குடிநீர் குழாய்கள் மூலம் சுமார் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சிலருக்கு குடிதண்ணீர் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு குடம் தண்ணீரை ரூ.15 கொடுத்து வாங்கி வருகின்றனர்.
கோரிக்கை
மேலும் சிலர் இந்த கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளாற்றில் குழித்தோண்டி அதில் ஊற்று மூலம் வரும் தண்ணீரை எடுத்து வந்து உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனால் வீண் அைலச்சல் மற்றும் கால நேரமும் வீணாகி வருகிறது.
மேலும், கால்நடைகளுக்கும் இந்த ஊற்று தண்ணீரை தான் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.