நிலப்பிரச்சினை
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பெருமானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர், பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 42). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் ஒருவருக்கும் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருதரப்பினரும் தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதற்கான ரசீதும் போடப்பட்டுள்ளது.
ரூ.2 ஆயிரம் லஞ்சம்
இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், “உங்கள் மீதான புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும்” என வேல்முருகனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு வேல்முருகன் பேரம் பேசி ரூ.2000 தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இது தொடர்பாக ராமநாதபுரம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
கைது
இதையடுத்து போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை வேல்முருகனிடம் கொடுத்து அனுப்பினர். அவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வைத்து, அந்த பண நோட்டுக்களை சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் ராமகிருஷ்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.