அண்ணன்-தம்பி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரபீக். இவருடைய மனைவி ரம்ஜான் பேகம். இவர்களுடைய மகன் ராசீத்(வயது 7).
அதே பகுதியை சேர்ந்தவர் நவுசாத் அலி. இவருடைய மனைவி நஜீலா பேகம் இவர்களது மகன் முகமது நபீஷ்(6). ரம்ஜான் பேகமும், நஜீலா பேகமும் உடன்பிறந்த அக்காள்-தங்கை ஆவர். இவர்களின் கணவர்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
குளத்தில் மூழ்கினர்
நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே ராசீத்தும், முகமதுநபீசும் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள அய்யனார் கோவில் குளத்தில் இறங்கியதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இந்த நிலையில் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகள் இருவரையும் காணாததால் அவர்களை இருவரின் தாயாரும் தேடிப்பார்த்தனர். அப்போது குளத்தின் கரையில் சைக்கிள் மட்டும் நிற்பது தெரிய வந்தது.
பரிதாப உயிரிழப்பு
இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் குளத்தில் இறங்கி தேடினர். அப்போது குளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த ராசீத், முகமது நபீஷ் ஆகியோரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அவர்களது தாயார்கள், சிறுவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.