விலையில்லா பொருட்கள்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வந்தன. குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.இதற்கிடையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா பொருட்களும் வரத்தொடங்கின. இதில் ஷூ மற்றும் சாக்ஸ் புதுக்கோட்டைக்கு நேற்று சரக்கு வாகனத்தில் வந்தன. புதுக்கோட்டையில் குடோனில் அவை இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
புத்தக பைகள்
இந்த ஷூக்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்புகளை சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கும், 17 ஆயிரம் மாணவிகளுக்கும் வழங்கப்பட உள்ளன. இவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.
இதேபோல் விலையில்லா புத்தக பைகள், எழுதுபொருட்கள், உபகரணங்கள், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலணிகள், சீருடைகள் உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் அடுத்தடுத்து வர உள்ளன.
அதன்பின் அவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.