4 வயது குழந்தை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பேய்கரும்பன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி நிவேதிதா. இவர்களுடைய மகள் தீக்சிகா (வயது4) நேற்று முன்தினம் வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சாப்பிடுவதற்கு கை கழுவ தீக்சிகா கழிவறைக்கு சென்றார்.
அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த பெரிய பாத்திர த்தில் கை கழுவுவதற்காக கீழே குனிந்தபோது எதிர்பாராதவிதமாக அவள் நிலை தடுமாறி குவளையில் தலை குப்புற விழுந்தாள்.
பரிதாப சாவு
கை கழுவ சென்ற குழந்தை வெகு நேரமாகியும் வராததால் மகேந்திரன் கழிவறைக்கு சென்று பார்த்த போது தீக்சிகா பாத்திரத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. இதனால் பதறிப்போன அவர் உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாநாடு போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பெண் குழந்தை பாத்திர த்துக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.