புதிய ரெயில்பாதை தூக்குப்பாலம் பொருத்தும் பணி நடந்து வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை பாம்பனில் கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
புதிய தூக்குப்பாலம்
மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம் அமைக்கப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே அதற்கு பதிலாக புதிய ரெயில் பாலம் பாம்பன் கடல் பகுதியில் அமைக்க முடிவானது. இந்த பாலத்தின் அருகில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் ரூ.545 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது.
புதிய ரெயில் பாலத்தின் முக்கிய பணியான மையப் பகுதியில் செங்குத்து வடிவிலான தூக்குப்பாலத்தை வைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்காக பாம்பன் பகுதியின் நுழைவுப் பகுதியில் இருந்து 77 மீட்டர் நீளமும், சுமார் 600 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலத்தை தூண்கள் வழியாகவே நகர்த்தி கொண்டு வந்தனர். இந்த பணி கடந்த 2 மாதமாக நடந்தது.
கப்பல்கள் செல்ல தடை
இன்னும் சில நாட்களில் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூண்கள் மீது புதிய தூக்குப்பாலம் பொருத்தப்பட உள்ளது.
இதற்காக பாம்பன் பாலத்தின் வழியாக கப்பல்கள், படகுகள் செல்லும் பாதையின் நடுவில் இரும்பு குழாய்கள் அமைத்து மேடை கட்டும் பணி தொடங்கியுள்ளது. அது முடிந்த உடன், அங்கு செங்குத்து வடிவிலான புதிய தூக்குப்பாலத்தை பொருத்த ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே அங்கு தொடர்ந்து பணிகள் நடப்பதால், மறு அறிவிப்பு வரும் வரை அந்த வழியாக கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் போன்றவை செல்ல அனுமதி கிடையாது என்றும் தூக்குப்பாலம் திறக்கப்பட மாட்டாது என்றும் ரெயில்வே துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.