விலையில்லா பொருட்கள்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித உபகரணங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. வருகிற கல்வியாண்டிற்காக பள்ளிகள் வருகிற 6-ந் தேதி திறக்கப்பட உள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தன. இதேபோல விலையில்லா ஷூ, சாக்ஸ் வந்திறங்கின.
கணித உபகரண பெட்டி
இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கணித உபகரண பெட்டிகள் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள குடோனிற்கு வந்திறங்கின.
இதேபோல 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா நோட்டுகளும் மினி லாரியில் வந்தன. அவை குடோனில் இறக்கி வைக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகளுக்கு இவை அனுப்பி வைக்கப்பட உள்ளன. பள்ளி திறக்கப்படும் நாளில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட அனைத்து பொருட்களும் மாணவர்கள் கையில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.