புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையினால் சாலைகள், மின்கம்பங்கள் சேதமடைந்ததை சீரமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.
கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்குவது குறித்தும், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும் மற்றும் கோடைகால மழை குறித்தும், அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகததில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:- நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். மேலும் குடிநீர் சரிவர கிடைக்காத பகுதிகளில் மாற்று ஏற்பாடுகள் மூலம் பொதுமக்களுக்குகுடிநீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.
மின்கம்பங்களைசீரமைத்தல்
மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி பகுதிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்ட நடவடிக்கைகளின்படி, உள்ளாட்சிப் பகுதிகளில் வட்டார அளவிலான குழு அமைக்கப்பட்டு சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில், சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டும். கோடை மழையினால் பாதிக்கப்பட்ட சாலையினை சரிசெய்திடவும், மேலும் மழையினால் சேதமடைந்த மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சீனிவாசன், செயற்பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) அய்யாசாமி, நகராட்சி ஆணையர் ஷியாமளா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.