தமிழகத்தில் ஜூன் 10-ல் பள்ளிகள் திறப்பு!




தமிழகத்தில் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முன்னதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜுன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக புதுவையில் வரும் ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுவை கல்வித்துறை அறிவித்தது இருந்தது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments