மீமிசலில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி!



மீமிசலில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை அமைச்சர் ரகுபதி திறந்த வைத்தார்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், ஆவுடையார்கோவில் தெற்கு ஒன்றியம் திமுக சார்பில் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று 01-05-2024 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மீமிசல் பேருந்து நிலையத்தில் கோடைகால தண்ணீர் பந்தலை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments