மணமேல்குடி மீன் மார்க்கெட்டுக்கு தினசரி விசைப்படகு, நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள், இறால்கள், நண்டுகள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்க வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் மார்க்கெட்டுக்கு வருகின்றனர். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். வெயிலின் தாக்கம், திசைமாறி வீசும் காற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நாட்டுப்படகு மீனவர்களுக்கு சரிவர மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் குறைந்த மீன்களே விற்பனைக்கு வருகிறது.
மேலும் பள்ளி விடுமுறை என்பதால் வெளியூரில் படிக்கும் மாணவர்கள் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அசைவ உணவை சமைத்து கொடுக்க விரும்புகின்றனர். இதனால் மணமேல்குடி கட்டுமாவடி மீன் மார்க்கெட்டை நோக்கி மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மீன் விலை உயர்வால் செங்கனி, முரல், பாறை போன்ற அனைத்து வகை மீன்களும் கூறு போட்டு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கூறு ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது. இந்த விலையேற்றத்தால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்து மீன்களை வாங்காமல் திரும்பி செல்கின்றனர். மேலும் சிலர் ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கி செல்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.