புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் 04.05.24 சனிக்கிழமை மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை” நடைபெறுகிறது.
இது குறித்து கடற்கரை வட்டார ஜமாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-
மழை வேண்டி தொழுகை
அல்லாஹ்வின் நல்லடியார்களே! சங்கைமிக்க உலமா பெருமக்களே, கண்ணியமிக்க ஜமாத்தார்களே.
புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக போதிய மழை இல்லாத காரணத்தினால் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. மழை இல்லாமல் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர், நீர் நிலைகள் வறண்டு போய் உள்ளன, பல கிராமங்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்க்க முடியாத நிலையில் உள்ளனர்.
இன்று பரவலாக எல்லா இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இந்த சூழ்நிலையில் மழை இறைவனிடத்தில் கேட்டுப் பெற என்ன வழிமுறைகளை குர்ஆனும் ஹதீஸும் சொல்லித் தருகிறதோ அதை இன்ஷா அல்லாஹ் நாம் பின்பற்றி அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கோரி மழைக்காக வேண்டி நாம் அனைவரும் தொழுது துஆ செய்வோம்.
முக்கிய அறிவிப்பு;
உளு செய்ய பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள்: 04-05-2024 சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு.
இடம்: பாப்புலர் பள்ளி வளாகம், மீமிசல்.
இப்படிக்கு,
செயலாளர், ஜமாஅத்துல் உலமா சபை கடற்கரை வட்டாரம்.
அலுவலகம்:-
மஸ்ஜிதுர் ரிழ்வான், 1451A, உசிலங்காடு ஆர்ச் அருகில் EC.ரோடு அம்மாபட்டினம் 614 617.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.