Train TTR: தாம்பரம் - செங்கோட்டை ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் வைரத்தோடை தவறவிட்ட நிலையில், டிக்கெட் பரிசோதகரால் மீட்கப்பட்டு அப்பயணியிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை வந்து சேரும் மும்முறை சேவை ரயில், தாம்பரத்தில் இருந்து வியாழக்கிழமை (மே 23) இரவு 9 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் மதுரை கோட்டம், செங்கோட்டை பிரிவைச் சேர்ந்த பயணச்சீட்டு பரிசோதகர் டி.கார்த்திகேயன் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு செங்கோட்டை வந்து சேர்ந்தது. இந்த நிலையில், ரயிலில் பயணி தவற விட்டுச் சென்ற வைரத்தோடு ஒன்றை பயணச்சீட்டு பரிசோதகர் கண்டெடுத்துள்ளார். மேலும், இதனை செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்து தவறவிட்ட பயணியிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நேர்மையான செயலைச் செய்த பயணச்சீட்டு பரிசோதகர் டி.கார்த்திகேயனை ரயில்வே அதிகாரிகள் மற்றும் பயணிகள் சங்கத்தினர் பாராட்டி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.