மணமேல்குடி வட்டார வள மையத்தில் 1 , 2 மற்றும் 3ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் - முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது






முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் அவர்கள் மற்றும் அறந்தாங்கி தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி

மணமேல்குடி வட்டார  வளமையத்தில் எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான
 1 ,2 மற்றும் 3 ம் வகுப்பு
முன் திட்டமிடல் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கும் பணிமனை கூட்டம் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம்   பாடத்திற்கு 
மணமேல்குடி 
வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய செழியன் 
 அவர்களின் தலைமையில் தொடங்கியது.

 மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் அமுதா மற்றும் வட்டார வளமையை மேற்பார்வையாளர் பொறுப்பு  சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதில் ஒவ்வொரு பாடத்திற்கு கருத்தாளர்கள் கலந்து கொண்டு இணையவழி கூடுகை குறித்த அட்டைகள் தயாரித்தல்,  , வெற்றி கதைகள் குறித்த படங்கள் தயாரித்தல், புத்தகக் கருத்துறை சார்ந்த படங்கள் தயாரித்தல் , மதிப்பீட்டு சொற்களஞ்சியம் , மின் அட்டைகள் தயாரித்தல், ஆங்கில பாடத்திற்கு கதை கூறுதலுக்கு  சொல் அட்டைகள் தயாரித்தல்  மற்றும் முகமூடி தயாரித்தல் போன்ற கற்றல் உபகரண பொருட்களை தயாரித்தனர்.

இக்கூட்டத்தில் ஆசிரியர்கள் தாமஸ் கிங், சரஸ்வதி,பெல்சியா, செல்வி மற்றும்  ரஹ்மத் பேகம் ஆகியோர் கலந்து கொண்டு தயாரித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments