வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவுசெய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் நிலையத்தில் கடந்த 2023-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (வயது: 55). இவர், தற்போது திருச்சி மாவட்ட்டத்தில் உள்ள தொட்டியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் விராலிமலையில் ஆய்வாளராக அவர் பணியாற்றியபோது, விராலிமலை அருகே உள்ள பொருவாய் கிராமத்தில், செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமாருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதில் அவருக்கும், நிலத்தரகர்களுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, விராலிமலை காவல் நிலையத்தில் 2023, மார்ச் 17-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இதில், ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் லஞ்சமாக பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக கடந்த 2023, அக்டோபர் 4 - ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார், இந்த புகார் குறித்து விசாரணையைத் தொடங்கினர். அவர்களின் விசாரணையின் முடிவில் ராஜேந்திரன் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால், நேற்று தொட்டியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக ரூ. 2 லட்சம் வரை லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்க பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட போலீஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.