புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கீழ்க்காணும் நாட்களில் காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. அதன்படி ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் 18-ந் தேதி பொன்பேத்தி உள்வட்டத்திற்கும், 20-ந் தேதி மீமிசல் உள்வட்டத்திற்கும், 21-ந் தேதி ஏம்பல் உள்வட்டத்திற்கும், 25-ந் தேதி ஆவுடையார்கோவில் உள்வட்டத்திற்கும் நடத்தப்பட உள்ளது.
புதுக்கோட்டை, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) (தே.நெ.) தலைமையில் புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் 18-ந் தேதி வாராப்பூர், 20-ந் தேதி புதுக்கோட்டை ஆகிய உள்வட்டத்திற்கும் நடக்கிறது.
புதுக்கோட்டை, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், (நிலமெடுப்பு), (காவிரி குண்டாறு வைகை இணைப்புக் கால்வாய்த் திட்டம்) தலைமையில் பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் 18-ந் தேதி காரையூர், 20-ந் தேதி அரசமலை, 21-ந் தேதி பொன்னமராவதி ஆகிய உள்வட்டத்திற்கும் நடக்கிறது.
கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் 18-ந் தேதி புதுநகர், 20-ந் தேதி கல்லாக்கோட்டை, 21-ந் தேதி கந்தர்வகோட்டை ஆகிய உள்வட்டத்திற்கும் நடக்கிறது.
மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் அறந்தாங்கி, வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் 18-ந் தேதி பெருமருதூர், 20-ந் தேதி கோட்டைப்பட்டினம், 21-ந் தேதி சிங்கவனம், 25-ந் தேதி மணமேல்குடி ஆகிய உள்வட்டத்திற்கும் நடக்கிறது.
குளத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் இலுப்பூர், வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் 18-ந் தேதி நார்த்தாமலை, 20-ந் தேதி மாத்தூர், 21-ந் தேதி கிள்ளுக்கோட்டை, 25-ந் தேதி குன்றாண்டார்கோவில், 26- ந் தேதி கீரனூர் ஆகி உள்வட்டத்திற்கும் நடக்கிறது.
ஆலங்குடி, விராலிமலை
ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் புதுக்கோட்டை, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) தலைமையில் 18-ந் தேதி வல்லநாடு, 20-ந் தேதி கீரமங்கலம், 21-ந் தேதி வெண்ணாவல்குடி, 25-ந் தேதி ஆலங்குடி ஆகிய உள்வட்டத்திற்கும் நடக்கிறது.
விராலிமலை தாசில்தார் அலுவலகத்தில், புதுக்கோட்டை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் 18-ந் தேதி கொடும்பாளூர், 20-ந் தேதி நீர்பழனி, 21-ந் தேதி விராலிமலை ஆகிய உள்வட்டத்திற்கும் நடக்கிறது.
திருமயம் தாசில்தார் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் 18-ந் தேதி செங்கீரை, 20-ந் தேதி கீழாநிலை, 21- ந் தேதி கோட்டூர், 25-ந் தேதி விராச்சிலை, 26-ந் தேதி திருமயம் ஆகிய உள்வட்டத்திற்கும் நடக்கிறது.
புதுக்கோட்டை, உதவி ஆணையர் (கலால்), தலைமையில் இலுப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் 18-ந் தேதி குடுமியான்மலை, 20-ந் தேதி சித்தன்னவாசல், 21-ந் தேதி வீரப்பட்டி, 25-ந் தேதி இலுப்பூர் ஆகிய உள்வட்டத்திற்கும் நடக்கிறது. கறம்பக்குடி தாசில்தார் அலுவலகத்தில், விராலிமலை கலால் மேற்பார்வை அலுவலர் தலைமையில் 18-ந் தேதி மழையூர், 20-ந் தேதி கறம்பக்குடி ஆகிய உள்வட்டத்திற்கும் வருவாய் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது.
கோரிக்கை மனுக்கள்
அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தில் கல்லாக்கோட்டை, கலால் மேற்பார்வை அலுவலர் தலைமையில், 18-ந் தேதி அத்தாணி, 20-ந் தேதி நாகுடி, 21-ந் தேதி பூவத்தக்குடி, 25-ந் தேதி அரசர்குளம், 26-ந் தேதி சிலட்டூர், 27-ந் தேதி அறந்தாங்கி ஆகிய உள்வட்டத்திற்கும் வருவாய் தீர்வாயம் நடத்தப்படவுள்ளது. வருவாய்த் தீர்வாய இறுதி நாளன்று குடிகள் கூட்டம் நடைபெறும்.
எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை சம்பந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் விண்ணப்பித்து தீர்வு பெறுமாறு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.