புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் 2 நாட்கள் சாகர் கவாச் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை





புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் விதமாக 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் என்ற ஒத்திகை நடைபெறும். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் 2 நாட்கள் சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது

இதில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி வந்தால் அவர்களை எவ்வாறு தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கடலோர பகுதிகளான கட்டுமாவடி, மும்பாலை, ஆதிப்பட்டினம், கோட்டைப்பட்டினம், பாலக்குடி, ஏம்பக்கோட்டை, அரங்கரை ஆகிய 7 இடங்களில் சோதனை சாவடி அமைத்து அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து அவர்கள் வாகனத்தின் பதிவு எண்களை பதிவு செய்த பின்னரே வாகனம் செல்ல அனுமதித்தனர். கடலோர காவல் குழுமத்தினர் தங்கள் ரோந்து படகின் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் படகுகளை சோதனை செய்தனா். பின்னர் படகிற்கு பதிவெண் உள்ளதா மற்றும் மீனவர்களுக்கு அடையாள அட்டை உள்ளதா என்று சரிபார்த்த பின்னரே படகுகள் செல்ல அனுமதிக்கப்பட்டது. 

சந்தேகம்படும் படி யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறத்தினர். இந்த ஒத்திகையில் காவல்துறையினர், கடலோர காவல் குழுமத்தினர், கடலோர காவல் படையினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments