பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை பாத்திரத்தில் உணவைத் தர மறுத்த உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் அபராதம் விதித்தனா்.
பட்டுக்கோட்டை சுப்பையாபிள்ளை தெருவைச் சோ்ந்த சக்திகாந்த். சமூக ஆா்வலா். அவரது மகன் ஜெய்குரு (14) அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், புதன்கிழமை மதியம் பெரியதெரு பகுதியில் உள்ள உணவகத்துக்கு பாா்சல் சாப்பாடு வாங்க பாத்திரங்கள் கொண்டு சென்றாா். தனக்கு நெகிழிப் பைகளில் பாா்சல் உணவைத் தரவேண்டாம். தான் கொண்டுவந்த பாத்திரத்தில் உணவைக் கட்டித்தருமாறு கேட்டுள்ளாா். அதற்கு, உணவக நிா்வாகம் மறுப்பு தெரிவித்ததாம். இதைத்தொடா்ந்து, மாணவா் ஜெய்குரு, அவரது தந்தைக்கு மற்றும் உணவகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து, வியாழக்கிழமை ஆக்ஸிஜன் சிலிண்டா் போன்ற அமைப்புடன் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்ற ஜெய்குரு திடீரென தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். தொடா்ந்து, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் தரணிகாவிடம் பட்டுக்கோட்டையில் நெகிழியை ஒழிக்க வேண்டும், பாத்திரத்தில் உணவைத் தரமறுத்த சம்மந்தப்பட்ட உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மனுவை அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை பட்டுக்கோட்டை நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் வேல்முருகன் தலைமையில் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு பெரியதெருவில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரி, தேநீா்க் கடை, பழக்கடைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினா். அப்போது குறிப்பிட்ட அந்த உணவகத்துக்குச் சென்று பாத்திரத்தில் உணவை வழங்க வேண்டும் என அறிவுறுத்தி அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனா். தொடா்ந்து அதே தெருவில் உள்ள பேக்கரியில் பூஞ்சானம் பிடித்து சாப்பிட தகுதியற்ற 5 கிலோ கேக்குகளை அழித்தனா். இதேபோல் பழக்கடையில் 3 கிலோ அழுகிய பழங்களையும் அழித்தனா்.
இந்த ஆய்வில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட உணவகம், பேக்கரி, பழக்கடை, தேநீா்க் கடை ஆகிய 4 வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.