பாங்காக் டூ திருச்சி...நேரடி விமான சேவை வழங்க தயாராகும் ஏர் ஏசியா!




தமிழகத்தின் திருச்சி விமான நிலையம் முக்கிய விமான நிலையங்களுள் ஒன்றாக உள்ளது. தற்போது கட்டப்பட்டுள்ள புதிய முனையம் திறக்கப்பட்டால் மேலும் முக்கியமான இடத்தை பெறும். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவையானது இயக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கூட சவுதி அரேபியாவின் ஜித்தா நகரத்துக்கும் திருச்சிக்கும் இடையே விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் தாய்லாந்து நாட்டின் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மாவட்டத்திற்கு நேரடி விமான சேவையை இயக்க முன்வந்துள்ளது.

வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கம்
இந்த புதிய விமான சேவையானது வருகிற செப்டம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானமானது வாரத்திற்கு செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏர்ஏசியா தலைமை நிர்வாக அதிகாரி கூறியதாவது:- தமிழகத்தில் வர்த்தகம், தொழில் மற்றும் கல்விக்கான மையமாக செயல்படும் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரமான திருச்சிராப்பள்ளியையும் சேர்த்து கூடுதலாக 11 வழித்தடங்களில் விமான சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் இந்திய சந்தையில் ஏர்ஏசியா தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறது.

உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலும் தென்னிந்தியாவின் முக்கிய ஈர்ப்புமான ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலும் நகரின் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும். 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், தமிழ்நாட்டு கட்டிடக்கலைக்கு ஒரு அற்புதமான உதாரணமாகவும், வண்ண மயமான தெய்வங்கள் அதன் கோபுரத்தை அலங்கரித்து வருகின்றன. 70 மீ உயரத்தில் பிரமாதமாக காட்சி அளித்து வருகிறது.

​திருச்சிராப்பள்ளி
ராக்போர்ட் கோயில், வரலாறு மற்றும் இந்திய வடிவமைப்பு ஆகியவற்றைப் பார்க்க விரும்புவார்கள். ஏர் ஏசியா தற்போது பாங்காக்கில் இருந்து இந்தியாவிற்கு 11 வழித்தடங்களில் கொல்கத்தா, சென்னை, ஜெய்ப்பூர், கொச்சி, பெங்களூர், கயா, லக்னோ, அகமதாபாத், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களுக்கு சேவை செய்கிறது.

​53 இயக்கங்கள்
இதன் மூலம் வாரத்திற்கு 53 விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான ஏர் ஏசியா விமானங்களில் இந்தியப் பயணிகள் 80 முதல் 90 சதவீத பயணிகளைக் கொண்டு இயக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments