அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கிழக்கு கடற்கரைசாலை
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிக அளவில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளிலும் சிக்குகின்றனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் சார்பில் பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் கால்நடைகள் வளர்ப்போர் அவற்றை வீடுகளில் கட்டி போடாமல் இருப்பதே முக்கிய காரணம் என கூறப்ப டுகிறது. இதனால் சாலைகளில் இரவு பகலாக மாடுகள் சுற்றித்திரிகின்றன.
அபராதம்
மேலும் இரவு நேரங்களில் சாலையிலேயே மாடுகள் படுத்துக்கொள்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பிடிபட்ட கால்நடைகளை அதற்கான பாதுகாப்பு கொட்டகையில் அடைத்து வைத்தும் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு கால்நடைகள் வளர்ப்போர் கட்டுப்படாததால் மீண்டும் சாலையில் கால்நடைகள் வலம் வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
தற்போது அதிராம்பட்டினம் நகராட்சி ஏரிப்புறக்கரை, ராஜாமடம் ஊராட்சி ஆகிய பகுதியில் உள்ள மாடுகள் சாலை பகுதியில் விடப்படுகின்றன. இதனால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
எனவே கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.