சேலத்தில் 16 வயது சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது. இதையடுத்து அந்த சிறுவனின் தந்தை, ‘ஓசி’ வண்டி கொடுத்தவர் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
விபத்து
சேலம் அம்மாபேட்டை எஸ்.கே.டவுன் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் பரணிதரன் (வயது 16). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் குணசேகரன் (54). சிறுவன் பரணிதரன் சம்பவத்தன்று குணசேகரனின் மோட்டார் சைக்கிளை, ‘ஓசி’க்கு கேட்டு வாங்கி, அந்த பகுதியில் ஓட்டிச்சென்று உள்ளார். அப்போது அந்த பகுதியில் சென்ற அங்கப்பன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கப்பன் காயம் அடைந்து, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதித்த தந்தை குமார், ‘ஓசி’ வண்டி கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் குணசேகரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
‘ஓசி’க்கு மோட்டார் சைக்கிள்
18 வயது நிறைவடையாத சிறுவர்கள் வாகனம் ஓட்டினாலும், சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்தியதில் சிறுவன் மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுவனின் தந்தை குமார், ‘ஓசி’க்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் குணசேகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.